PRASNOTHRA RATHNA MALIKA – J K SIVAN

கேள்வி பதில் ரத்னமாலை –    நங்கநல்லூர்  J K  SIVAN
ஆதி சங்கரர்-ப்ரஸ்னோத்ர ரத்ன  மாலிகா

கேள்வி பதில் ரத்னமாலை 146-160

146  எதிலும்  பயமற்ற  நிலை  எது ?
பற்றற்ற  தன்மையோடு  வாழும்போது  பயம் எதைப்பற்றியும் இல்லை.

147.  எதைக் கண்டு பயப்பட வேண்டும்?
மனிதன் பயம் கொண்டு  தவிப்பது பணம் கையில் இருக்கும்போது தான். பணத்தின் மறு பெயர்  தான் பயம்.

148.  மனிதனிடம் அவசியம்  இருக்க வேண்டியது எது?

கடவுளிடம்  பக்தி.

149.   எது பாபம் எனப்படுகிறது?   

மற்றவர்களை துன்புறுத்துவது கொடிய  பாபம்.

150. கடவுளுக்கு பிடித்தமானவன் எவன் ?
தானும்  துன்புறாமல், பிறரையும்  துன்புறுத்தாமல் இருப்பவன் .

151.  எப்படி ஒருவன் முன்னேறமுடியும்?
எளிமையாக   போதும் என்ற மனத்தோடு  திருப்தியாக வாழும்போது.

152. அறிவை எப்படி  பெறமுடியும்?
நன்றாக   வேத சாஸ்திரங்களை  கற்றவர்களோடு  பழகும்போது. .    

153. மரணத்தை காட்டிலும் ஒருவனுக்கு எது  துயரமான  சம்பவம்?
அவன் பேர் சமூகத்தில்  ரிப்பேர்  ஆகும்போது.

154. சுகமான  வாழ்க்கை எது?
பல ஜென்மங்களில் செய்த  நல்ல கர்மாக்களின் பலனை அனுபவித்து வாழும்போது.

155. நமக்கு  துன்பமும் துயரமும் எங்கிருந்து  உருவாகிறது?
நாம் செய்த  தீய  செயல்கள், பாபங்கள் மூலம்.

156. எவன் குறைவற்ற செல்வம் பெறுபவன்?                                                                                                                                                          பக்தியோடும்  நன்றியோடும்  குறைகள் இல்லாமல் இறைவனை வேண்டுபவன் பாக்கியசாலி.

157. எவன்  நிச்சயம்  முன்னேறுபவன்
?பண்போடும், அன்போடும், எளிமையாக, நேர்மையாக  வாழ்பவன்.

158. அப்படியென்றால்  யார்  வாழ்வில்  வீழ்பவன் ?

கர்வம், அகம்பாவம், சுயநலம், தற்பெருமை  கொண்டவன் ஒரு படி கூட  மேலே  ஏறமுடியாதவன்.

159. எவனை நம்பக்கூடாது?
எதற்கெடுத்தாலும்  எப்போதும் பொய்  சொல்பவனை.

160. எப்போதுபொய்  கூட  பாபம்  ஆகாது ?
தர்மத்தை காக்க, பிறருக்கு நன்மை பயக்கும் எனும் காரணத்துக்காக  சொல்லும் பொய்  நிஜத்துக்கு

Avatar photo
Krishnan Sivan

Sri J.K.Sivan, by profession is a specialist consultant in Marine Insurance, having been a top executive in International Shipowning Organisations abroad, besides being a good singer, a team leader in spiritual activities, social activist, and organised pilgrimage to various temples in the South covering about 5000 temples, interested more in renovating neglected, dilapidated ancient temples He resides in Chennai at Nanganallur.

Articles: 1399

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *