பார் போற்றும் பரமஹம்ஸர் – நங்கநல்லூர் J K SIVAN
பகவான் மேல் நம்பிக்கை
ஹோ என்று ஓடும் கங்கைக்கரையில் , தக்ஷிணேஸ் வரம் பவதாரிணி அம்பாள் கோவில் அமைதியாக அழகாக மனதை மயக்கி நிற்கிறது. பல வருஷங் களுக்கு முன்பு நான் அங்கே போய் தரிசித்திருக் கிறேன்.
அந்த ஆலயத்துக்குள் அம்பாள் சந்நிதி முன் பல நூறு வருஷங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை. நிறைய பக்தர்கள் கூடி இருக்கிறார்கள்.
ராமகிருஷ்ணர் விழித்து பரக்க பரக்க எல்லோரையும் பார்க்கிறார். அவர் மனதில் எவர் முகமும் பதியவில் லை. அவர் மனம் முழுதும் அம்பாள் மீதே ஆணி அடித்திருந்தது.
”கேதார், நம்பிக்கை என்பது எவ்வளவு சக்தி கொண் டது என்பதை எப்போதாவது நீ உணர்ந்திருக்கிறாயா?, ஒரு சம்பவம் சொல்கிறேன் கேள்.
ராமன் கடவுள், பரமாத்மாவின் அவதாரம். அவன் ராவணனை அழிக்க லங்காபுரி போவதற்கு கடலைக் கடக்க ஒரு பாலம் தேவையாக இருந்தது. ஆனால் ராம பக்தன் ஹனுமான் இருக்கிறான் பார், ஒரே தாண்டு, தயக்கமே இல்லாமல் ஒரே தாவல், அடுத்த கரையில் லங்கையில் போய் நின்றான். அவனுக்கு கடலைக் கடக்க பிரிட்ஜ், BRIDGE பாலம் தேவையாக இருக்க வில்லை. ஏன் என்றால் அவன் நம்பியது ராம நாமத்தை மட்டும் தான். ”ஜெய் சீதாராம், ஜெய் ராஜா ராம்” என்ற வார்த்தைகளே அவனைப் பறக்க வைத்தது. கடலைத் தாண்டி குதிக்க வைத்தது.
விபீஷணன் ஒருவனை கடலுக்கு அக்கரையில் ராமனுக்கு சேதி சொல்ல அனுப்பினான். அவன் தயங்கி தயங்கி நின்றான்.
”என்னடா தயங்கறே , விஷயம் என்னன்னு பட்டுன்னு சொல்லு ” என்று கேட்டான் விபீஷணன்.
‘மஹாராஜா, நான் எப்படி கடலை தாண்டி அக்க ரைக்கு போக முடியும்’?னு கேட்டான் அந்த ஆள்
.”ஓ அதுக்கு தான் நீ தயங்கி தயங்கி நின்னியா?”என்னு கேட்ட விபீஷணன் ஒரு இலையை பக்கத்து மரத்தி லிருந்து பறித்து அதில் ”ராம ராம” என்று எழுதினான். அந்த சேவகன் மேலே போட்டிருந்த அங் கவஸ்த்ர முனையில் அதை முடிந்து வைத்து
”இப்போ நட.அது உன்னை கடல் மேல் நடக்க வைக்கும்” என்றான் விபீஷணன்.
”ராஜா, இந்த மந்திர முடிச்சு என்னை கடல் மேல் நடக்க வைக்குமா?” என்று ஆச்சர்யத்தோடு கேட்டான் சேவகன்.
”ஓ நிச்சயமாக, பயப்படாதே, அதன் சக்தி மேல் நம்பிக்கை இருந்தால் போதும். நீ சௌகர்யமாக நடக்கலாம். நம்பிக்கை இல்லை என்றால் தண்ணீரில் மூழ்கி விடுவாய்’ என்றான் விபீஷணன்.
”ராமா ராமா” என்று சொல்லிக்கொண்டே அந்த சேவகன் கடலின் மேல் ஜம்மென்று நடந்தான். திடீரென்று அவனுக்கு ஒரு சந்தேகம் வந்தது
விபீஷணன் அந்த அங்கவஸ்திரத்தில் அப்படி என்ன முடிந்து வைத்திருக்கிறான் என்று அறிய ஆவலோடு முடிச்சை அவிழ்த்து அதில் இருந்த இலையைப் பார்த்தான். ராமா ராமா என்று எழுதி இருந்தது.
”அட சே, இந்த சாதாரண இலையும், அதன் மேல் எழுதிய இந்த ரெண்டு எழுத்துமா என்னை கடல் நீர் மேல் நடக்க வைத்தது? வெறும் ”ராமா ” என்ற ரெண்டு எழுத்துக்கு இந்த சக்தி உண்டா? வேறு ஏதோ மந்திர மாயம் இருக்கிறது போல் இருக்கிறதே’ என்று சந்தேகித்தவன் அடுத்த கணமே கடலின் ஆழத்துக்குள் மூழ்கிவிட்டான்.
இதிலிருந்து என்ன தெரிகிறது. பகவான் மேல், அவன் நாமத்தின் மேல் பக்தி இருக்கவேண்டும். அது இருந்தால் போதும், பசு, பெண், ப்ராமணனைக் கொன்ற பாவம் கூட நீங்கும். பகவானே உன்னருளால் பாவம் நீங்க பெற்றேன்.இனியும் ஒருமுறை என் வாழ்வில் இத்தகைய பாவங்களை செய்யமாட்டேன் என்று வேண்டிக்கொண்டால் போதும். அப்புறம் எதற்கும் பயமே வேண்டாம்” என்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் .
ஆனந்த மேலீட்டால் ராமகிருஷ்ணர் கணீரென்று வங்காளியில் பாட ஆரம்பித்துவிட்டார்”
நான் துர்காம்மா, உன் பேரை மட்டும் விடாமல் சொல்லிக்கொண்டே இருந்தால் நீ அப்புறம் எப்படி அம்மா என்னை முக்தி பெறாமல் விடமுடியும்? நான் கேடு கெட்டவனாக இருந்தாலும் உன் நாமத்தை என்று மறந்தேன்? நான் குடிகாரனாக இருக்கட்டும், குழந்தையை கருவில் சிதைத்தவனாக இருக்கட்டுமே . யாராவது ஒரு பெண்ணையோ, பசுவையோ, ப்ராமணனையோ கொன்றவனாக இருக்கட்டுமே, அது உண்மையாகவும் இருக்கட்டுமே, அதெல்லாம் எனக்கு தடங்களாகவே இருக்காதே அம்மா, உன் திவ்ய நாமத்தில் மயங்கி நான் என்னை மறந்து வாய் நிறைய கூறும்போது நான் எப்படிப்பட்டவனாக இருந்தென்ன? நான் பிராமணனாக கூட உயர்ந்து விடுவேனே .. உன் நாமத்துக்கு அவ்வளவு சக்தி, பலம் அம்மா, என்று அந்த பாட்டின் அர்த்தம்.
பரம ஹம்ஸர் கண்ணில் தூரத்தில் ஒரு ஓரமாக உட்கார்ந் திருந்த நரேந்திரன் மேல் பட்டது.
”நீங்க எல்லோரும் அதோ அந்த பையனைப் பாருங்கோ. நான் சொன்ன மாதிரி நம்பிக்கை, பக்தி நிறைந்த பையன் அவன்” ஒரு விஷமம் பண்ணு கிற பையன் அப்பா அருகில் இருக்கும்போது பெட்டிப் பாம்பாக இருப்பது போல் அம்பாளிடம் மனதை பறிகொடுத்து அடக்கமாக உட்கார்ந்திருக்கிறான் பாருங்கோ’. இதை விட்டு அவன் மனது அகன்றால் அவன் வேறு மாதிரி ஆகிவிடுபவன். எல்லாம் மாயை. அம்பாள் அனுக்ரஹம். நரேந்திரன் மாதிரி மனிதர்கள் விநோதமானவர்கள். சுதந்திரமானவர்கள். உலகத்தோடு இனைந்து காணப்படுபவர்கள் அதே சமயம் உலகத் தை விட்டு விடுபட்டு அப்பாற்பட்டவர்கள். வளர வளர அவர்களுக்குள்ளே இருக்கும் ஞானாக்னி, சுடர் விடும். பகவானை நெருங்கிவிடுபவர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்ட உலகில் பிறந்தவர்கள். நமக்கெல்லாம் ஆசார்யர்கள். உலகததை துளியும் லக்ஷியம் பண்ணாதவர்கள். மண் பெண் பொன் ஆசை என்றும் கனவிலும் நெருங்காதவர்கள். ”
ஆஹா நரேந்திரன் என்ற அந்த வாலிபன், பின்னால் சுவாமி விவேகானந்தாவாக போவதை எப்படி ராமகிருஷ்ண பரமஹம்ஸர் உணர்ந்திருக்கிறார். எப்படி பல வருஷங்கள் முன்பே சரியாக கணித்து மற்றவர்களுக்கும் அதை எடுத்து ச் சொல்லி இருக்கிறார்.
பகவானே, நான் அதிர்ஷ்டக்காரன் இதெல்லாம் படித்து அறிந்து கொள்ள என்று புளகாங்கிதம் அடைகிறேன். அதே சந்தோஷத்தை துளியும் குறையாமல் உங்களிடம் அளிக்க இன்னும் கொஞ்சம் அதிகம் பாக்யம் பண்ணி யவன் அதற்கும் அந்த ஸ்ரீ கிருஷ்ணனே காரணன் என்று நம்புகிறேன். நம்பிக்கை தானே ரொம்ப அவசியம்.
Excellent Sir !