ஸ்ரீமத் பாகவதம் – 10வது காண்டம் – நங்கநல்லூர் J K SIVAN
நண்பர்கள் சந்திப்பு
”ஸ்வாமி ,சுகப்பிரம்ம மஹரிஷி , மாயனும் மாயாவும் சேர்ந்து கம்சனுக்கு எச்சரிக்கை கொடுக்க வைத்து எங்கோ கிருஷ்ணன் பிறந்து வளர்வதை அறிவித்தார்கள் என்று சொன்னீர்கள். ஆச்சர்யமாக இருக்கிறது. கிருஷ்ணன் வளர்ந்தது பற்றி சொல்லுங்கள்”
”பரீக்ஷித், குழந்தை பிறந்து தொப்புள் கொடி அறுத்ததும் அடுத்ததாக வந்து நிற்பவர் ஜோசியர். பிறந்த நேரம், நாள், நக்ஷத்ரம், திதி எல்லாம் ஜாதகம் பார்த்து பிள்ளையின் ஆயுள், எதிர்காலம் என்ன என்று பெற்றோர்கள் ஆவலாக தெரிந்து கொள்வார்கள். ஜாதகர்மா என்று அதற்கு பெயர். தேவகி வசுதேவரும் அதெல்லாம் கிருஷ்ணனுக்கு செய்வதற்கு நேரமில்லை. பிறந்ததுமே பார்சல் பண்ணி உயிர் தப்ப நள்ளிரவி லேயே கோகுலம் அனுப்பப்பட்டான். இப்படிச்செய் என்று தந்தை வசுதேவருக்கு கட்டளையிட்டதே மஹாவிஷ்ணு அம்சமான கிருஷ்ணன் தான்.
மெஷின் மாதிரி வசுதேவர் கிருஷ்ணனைத் தூக்கிக் கொண்டு கம்சன் அரண்மனைச் சிறையி லிருந்து வெளியே வந்து, எவரும் பார்க்காமல் மதுராவை விட்டு கிளம்பி கொட்டும் மழையில் காரிருளில் யமுனை யைக் கடந்து அக்கரையில் கோகுல கிராமம் அடைந்து நந்தகோபன் அரண்மனைக்குள் எவரும் பார்க்கா மலேயே நுழைந்து பிரசவ அறையில் புகுந்ததும் கிருஷ்ணன் யசோதையின் வயிற்றில் உதித்து பிறந்தான். அடுத்து இன்னொரு பெண் குழந்தை அப்போதே யசோதைக்கு யோகமாயா வாக பிறந்து அந்த குழந்தையை வசுதேவர் தூக்கிக்கொண்டு வந்த வழியே மீண்டும் சென்று எவர் கண்ணிலும் படாமல் சிறைக்குள் தேவகி அருகே பிறந்தகுழந்தையாக குவா குவா என்று கத்தியதும் காவலாளிகள் எழுந்தனர். கம்சனுக்கு எட்டாவது குழந்தை பிறந்த சேதி பறந்தது. தேவகிக்கு விஷ்ணுவாக சதுர்புஜத்தோடு, சர்வா பரணனாக பிறந்தவன் யசோதைக்கு கருப்பு கிருஷ்ண னாக உருவெடுத்தான் . பகவானால் முடியாது என்ன? தேவகியின் பக்திக்கு முன் பகுத்தறிவு இங்கே செல்லாது. யானை முன் அது கொசு.
”கோகுலத்தில் அப்புறம் நடந்த விஷயங்களை சொல்லுங்கள் குருநாதா?” என்கிறான் பரீக்ஷித்.
”நந்தகோப மஹாராஜா, தாராள மனது கொண்ட ஒரு தலைவன். அவன் செய்த புண்யம் தானாகவே ஸ்ரீ கிருஷ்ணன் அவன் வீடு தேடி வந்து யசோதை மகனாக பிறந்தான். கிருஷ்ணன் பிறந்த சந்தோஷத்தில் எண்ணற்ற பிராமணர்களை அழைத்து உபசரித்து தானங்கள் வாரி வழங்கினான். எங்கும் வேத நாதம் ஒலித்தது. லக்ஷக்கணக்காக பசுக்களை கோ தானம் செய்தான். எல்லா பசுக்களுக்கும் மஞ்சள் குங்கும சந்தன பூச்சு. ஆபரணங்கள் , வஸ்திரங்கள் அலங்காரம். மலை மலையாக தானியங்கள் தானம். வாத்தியங்கள் எங்கும் சுநாதமாக ஒலித்தன. கோகுலம் கிராமத்தில் எல்லோர் மனத்திலும் ஆனந்தம். கோபர்கள் வண்ண வண்ண வஸ்த்ரங்களில் தலை ப்பாகை புத்தாடை அணிந்து மகிழ்ச்சியோடு திரிந்தனர். நந்தகோப மஹாராஜா அரண்மனையில் எங்கும் மக்கள் வெள்ளம். கோபியர்கள் தட்டு தட்டாக , பக்ஷணங்கள், பூக்கள், பரிசுகள் எடுத்துக்கொண்டு யசோதை அருகே சென்றார்கள்.
‘ கிருஷ்ணா, எங்கள் புது மஹாராஜா” என்று மஞ்சள் நீர், பால் தயிர் எண்ணெய் எல்லாம் எங்கும் தெளித்து. ஆர்ப்பரித்து வரவேற்றனர். நந்தகோபன் அரண்ம னையில் வருவோர் போவோர்க்கெல்லாம் பரிசுகள், ஆபரணங்கள், வஸ்திரங்கள் அளித்தார்கள்.
‘ பரீக்ஷித், இவ்வாறு நந்தகோபன் அரண்மனையில் கிருஷ்ணன் பிறந்ததற்காக கோலாகலமாக மகிழ்ச்சி.
நந்தகோபன் நிறைய பரிசுகள் எல்லாம் தந்துவிட்டு மதுராவில் ராஜாவிற்கு கப்பம் செலுத்த சென்றார். நீண்ட நாள் நண்பன் வசுதேவர் நந்தகோபனை சந்திக்க கோகுலம் சென்றார். நண்பனை வெகு நாட்கள் கழித்து சந்தித்த நந்தகோபன் கட்டி அணைத்து , வரவேற்றான். உபசரித்தான். நந்தகோபன், உன் வீட்டில் வளரும் சிறுவர்கள் நலமா? என்று கிருஷ்ணன் பலராமனைப் பற்றி வசுதேவர் விசாரித்தார்.
வெகுகாலமாக தனக்கு புத்ர பாக்கியம் இல்லாத குறையை கிருஷ்ணன் நந்தகோபருக்கு நீக்கினான் என்று மகிழ்ச்சியோடு நந்தகவொப்பான் வசுதேவரிடம் சொன்னான்.
”என் மகன் பலராமன் எப்படி இருக்கிறான்? என்றும் வசுதேவர் கேட்டார்.
”வசுதேவா , பாவம் உன் குழந்தைகள் பலரை கம்சன் கொன்றது பற்றி அறிந்தேன். மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது”என்றான் நந்தகோபன்.
விதி வலியது. அதன் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாதே என்று நந்தகோபன் வருந்தினான். வெகு நேரம் அளவளாவிய பிறகு ”நந்தகோபா, நீ உடனே உன் ஊர், கோகுலத்துக்கு திரும்பு.எங்கும் நல்ல சேதிகள் காதில் விழவில்லை. மதுரா ராஜ்யத்துக்கு கப்பம் கட்டியாகி விட்டதால் உடனே திரும்பு”என்கிறார் வாசுதேவர் .
பரீக்ஷித், இவ்வாறு வசுதேவர் அறிவுரை சொல்லிய பிறகு நந்தகோபன் பசுக்கள், கோபர்கள் புடைசூழ கோகுலத்தை நோக்கி நடந்தான்.
தொடரும்