விஞ்ஞான நௌகா 4/9 – நங்கநல்லூர் J K SIVAN
நான் தான் ப்ரம்மம்
यदज्ञानतो भाति विश्वं समस्तं विनष्टं च सद्यो यदात्मप्रबोधे ।
मनोवागतीतं विशुद्धं विमुक्तं परं ब्रह्म नित्यं तदेवाहमस्मि ॥ ४॥
Yad ajnanato bhati viswam samastham Vinashtam cha sadyo yadaatma prabodha
Manovaagatheetham visudham vimuktam Param Brahma nityam tadevaaham asmi. 4
யத் அஜ்ஞாநதோ பதி விஸ்வம் ஸமஸ்தம் விநாஷ்டம் ச ஸদ்யோ யদாத்மா ப்ரபோধா ॥
மநோவாগதீதம் விஶுதம் விமுக்தம் பரம் ப்ரஹ்ம நித்யம் ததேவாஹம் அஸ்மி., 4
நாம் என்றாவது ஒரு நாள் ‘நான் தான் ப்ரம்மம்’ என்று சொல்கிறோமா? ப்ரம்ம ஹத்தி என்று தான் மற்றவர்களை கூசாமல் திட்டுகிறோம். உண்மையில் நாம் தான் ப்ரம்மம். நாம் தான் ஆத்மா. இதை உணர எத்தனை படித்தாலும், பிறர் சொல்லி கேட்டாலும் எழுதினாலும் பாடினாலும் போதவே போதாது. தனிமையில் அமர்ந்து ஆத்ம விசாரம் பண்ணினால் ”நான்” உண்மையிலேயே யார் ? என்று ஆராய்ந்தால் தான் கொஞ்சம் முன்னேறமுடியும். ரமணர் தான் அனுபவத்தில் கண்டதை எவ்வளவோ சொல்லிக் கொடுத்திருக்கிறார்.
உலகம் மாயையால் சூழப்பட்டது என்று புரிந்து கொள்ளவே பல பிறவிகளை எடுத்தும்நமக்கு இன்னும் புரியவில்லை. அறிவு போதவில்லை. இந்த அஞ்ஞானம், அறியாமை நம்மை ஆத்ம ஞானம் பெற முடியாமல் தடுக்கிறது. மனம் வாக்கு காயம் இதையெல்லாம் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இதற்கு அப்பாற்பட்ட,தூய புலன்களுக்கு அப்பாற்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்க தடையாக இருக்கிறது. தெய்வீகம் அடைய முடிந்தால் தான் நாம் தெய்வமாகலாம். மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்பது ரொம்ப ரொம்ப ஸர்வ நிச்சயம். ஆனால் வெறுமே PBS மாதிரி பாடினால் தெய்வம் ஆக முடியாது. கடினமாக முயன்று வைராக்கியத்தோடு ஆத்ம வேட்கையில் ஈடுபடவேண்டும்.