பசிப்பிணி மருத்துவர் – நங்கநல்லூர் J K SIVAN வடலூர் வள்ளலார்
தைப்பூச நன்னாள் இந்த வருஷம் ஞாயிற்றுக்கிழமை 5.2.2023 அன்று கொண்டாடப்படும். 1874ம் வருஷம் 150 வருஷங்களுக்கு முன்புஒரு மஹான்வடலூர் என்றகிராமத்தில் சித்திவளாகம் எனும்ஒரு சிறிய ஆஸ்ரமத்தில் ஏற்றியவிளக்கு இன்னும்எரிந்துகொண்டு அவரது அருட்பெரும் ஜோதியாக தரிசிக்கப்படுகிறது. தைப்பூசம் அன்று வள்ளலார்ஜோதியில் கலந்தபுனித தினம்.
வள்ளலாரா யார் அவர்? பாரி,ஓரி, காரி, பேகன், அதியமான் மாதிரி தாராளமாக பொருளை வாரி வழங்கியவரா என்று கேட்பவர்கள் இன்னும்இருக்கிறார்கள். நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமல் நமது காலம் கடந்துவிடுகிறது.அவர்களுக்காகவாவது நான் இதை எழுத வேண்டாமா? தெரிந்தவர்களுக்குஎடுத்துச் சொல்ல எனக்கு அருகதைஇல்லை. அந்தஸ்துஉயரவில்லை. அறிவும்போதவில்லை. அன்று நடந்ததை சொல்கிறேன்.
30. 1 1874 நள்ளிரவு. விடிந்தால் தை பூசம். எப்போதும் போல் சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை எனும்அருளாளரைச் சுற்றிஎண்ணற்ற பக்தர்கள்குழுமி இருந்தார்கள். எல்லோரையும் ஒருமுறைகண் சிமிட்டாமல்பார்த்தார். தன்னுடையவழக்கமான தியானஅறைக்குள் சென்றார்.ஒரு தீபத்தோடுவெளியே வந்தார். ”என்அருமை மக்களே,என்னோடு இதுகாறும் வாழ்ந்து வணங்கிய அன்பான சகோதரர்களே, இதோ இந்ததீபம் தான்இனிமேல் நீங்கள்வணங்க வேண்டிய தெய்வம். நான் இந்தஅறைக்குள் செல்கிறேன்.யாரும் கதவைத்திறக்க முயற்சிக் கவேண்டாம். வெள்ளைக்கார அரசாங்கம் என்விருப்பத்தை மீறிகதவை உடைத்துதிறந்தாலும் உள்ளேநான் இருக்க மாட்டேன்.எல்லா உயிரிலும்கலந்திருப்பேன். அரசாங்கத்தை எல்லா உயிரிடத்தும் பாரபக்ஷமின்றி காருண்யம் புரிய சொல்வேன், செய்வேன். இதுஎன் முடிவு.” இது தான் திருவருட்பாவை நமக்கு அருளிச்செய்த, அருட்ஜோதிவள்ளலார் எனும்சிதம்பரம் ராமலிங்கம்பிள்ளை கடைசி வார்த்தையாக கூறியது. பிறகு அவர் அந்த அறைக்குள்ளேசென்று உள்ளே தாழிட்டுக்கொண் டார். அப்புறம் வெளியேவரவே இல்லை. சில மணிநேரம் கழித்து அந்த கதவைத்திறந்தவர்கள் அப்புறம்வள்ளலாரை இன்று வரை காணவில்லை. எங்கேசென்றார் வள்ளலார்? எப்படி மறைந்தார்? தீபம் மட்டுமேஎரிந்து கொண்டிருந்ததுமுன்னிலும் பிரகாசமாக.ஓஹோ ”அருட் பெருஞ்சோதிதனிப்பெரும் கருணை” யாக ஜோதியில் கலந்துவிட்டாரோ?. வள்ளலார் இறைவனுடன் கலந்தார் எனசேதி கேட்டுதென்னாற்காடு வெள்ளைக்காரகலெக்டர் டாக்டர்கள்புடை சூழகதவை திறந்துஉள்ளே சென்றபோதுஅங்கே அழுகியபிண நாற்றத்தைஎதிர்பார்த்த வர்களுக்குபச்சை கல்பூரவாசனை கமகம வென்று மணத்தது. வடலூர் ராமலிங்கஅடிகள் என்றபெயர் சிதம்பரம்ராமலிங்கம் பிள்ளைஎன்ற பெயரைவிட அதிகமாகபரவ ஆரம்பித்துவிட்டது. இருப்பினும்வள்ளலார் என்றபெயர் உலகளவில்உலவுகிறது.
வள்ளலார் வாக்குஎப்படி என்றுஒரு பாடலில்அவர் பாடுவதைரசியுங்கள்:
”’நான் உன்மூத்த பிள்ளை.என் கையில்கருணை நீதிச்செங்கோல் தரப்பட்டிருக்கிறது.ஜீவ காருண்யம்செய்வதற்கு என்றேஎன் தெய்வமே,நீ உன்னைஎன்னில் காட்டிஉன்னில் என்னைஏற்றுக் கொண்டாய்.இனி எனக்குதுயர் இல்லை.நல்லதே செய்தாய்.என் அன்னையே,அரசே, தந்தையே,எல்லாமும் நீயே,என் மனத்திலிருந்ததிரையை நீக்கி விட்டாய். உன் ஒளிஇனி என்னுள்ளே,உன்னை சரணடைந்தேன்”. அவர் ஏற்றிவைத்த அடுப்புஇன்னும் எரிந்துகொண்டு தான்இருக்கிறது. கோடிக்கணக்காக எத்தனையோபேர் பலவருஷங்களாக இன்றுவரைவடலூரில் அவர்நிர்மாணித்த சித்திவளாகம், சத்யஞான சபையில்பசிப்பிணி தீர்ந்துமகிழ்கிறார்கள். யார் போனாலும்சாப்பிடாமல் உள்ளேபோகக்கூடாது. நானும் பசியோடு ஒருஇரவு வடலூர்சென்றபோது வயிறார ரசம், மோர்சாதம் சாப்பிட்டுஇருக்கிறேன்.